Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

சாயல்குடி அருகே : பெண்களிடம் ஏழரை பவுன் திருட்டு :

சாயல்குடி அருகே கோயில் திருவிழாவில் 2 பெண்களிடம் ஏழரை பவுன் நகைகள் திருடப் பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த விநாயகன் மனைவி பொன்னுத்தாய்(65). இவர் கடந்த 24-ம் தேதி காலை தனது கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் வீட்டுக்குத் திரும்பியபோது அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலி திருடப்பட்டது தெரிய வந்தது. அதேபோல் இவரது பக்கத்தில் நின்ற சிந்தாமணி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிச்சங்கிலியும் திருடுபோனது. நகைகளின் மதிப்பு ரூ. 2.25 லட்சம். இதுகுறித்து புகாரின் பேரில் சாயல்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x