Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை(ஆக.27) காலை 10 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயத்துக்கான நீர்ப் பாசனம், கடன் உதவிகள், இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

இதேபோல, மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை(ஆக.27) காலை 10.30 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரா.லலிதா தெரிவித்துள்ளார்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் ஆக.31-ம் தேதி காலை 11.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x