Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM

காஞ்சிபுரம் ரவுடி கொலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 2 பேர் சரண் :

காஞ்சிபுரம் ரவுடி கொலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 2 பேர் சரண் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். ரவுடியான அவர் மீது காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் வழிபறி, மணல் கடத்தல் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்அதே பகுதியைச் சேர்ந்த ஒருபெண்ணை காதலித்து திருமணம் செய்தார். வீட்டை விட்டு வெளியே சென்ற பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இவ்வழக்கில் போலீஸ் தங்களை தேடுவதை அறிந்த விப்பேடு பகுதியைச் சேர்ந்த சுரேன்(35), விக்னேஷ்(29) ஆகிய இருவரும் நேற்று விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் அருண் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x