Published : 24 Aug 2021 03:15 AM
Last Updated : 24 Aug 2021 03:15 AM

ரேஷன் கடையை பக்கத்து கிராமத்துக்கு மாற்றியதை கண்டித்து பெண்கள் மனு :

இதுகுறித்து முத்தாலம்மன் மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் கார்த்திகைராணி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 253 குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் செயல்பட்ட ரேஷன் கடையை, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் பாதுகாப்பாக இல்லை எனக்கூறி, வெங்கடேஸ்வரா காலனிக்கு மாற்றினர். பின்னர் கடந்தாண்டு எங்கள் கிராமத்திலேயே கட்டிடம் கட்டிக் கொடுத்தோம். அதன்பின் 6 மாதங்கள் இங்கு ரேஷன் கடை செயல்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய கட்டிடத்திலும் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, வட்ட வழங்கல் அலுவலர் மீண்டும் வெங்கடேஸ்வரா காலனிக்கு கடையை மாற்றி விட்டார். இதனால் எங்கள் கிராம மக்கள் 2 கி.மீ. தூரம் நான்கு வழிச் சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே பாம்புவிழுந்தான் கிராமத்திலேயே மீண்டும் ரேஷன் கடையை அமைத்துத்தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x