நெல்லை இளைஞர் கொலை வழக்கில் 2 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் :

நெல்லை இளைஞர் கொலை வழக்கில் 2 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் :
Updated on
1 min read

திருநெல்வேலி தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அஜித்(30). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த பிப்ரவரி மாதம் காட்டுப்பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் கருவானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பொன்னம்பலம் மகன் தில்லையம்பலம்(31), ஆனையூர் அய்யனார்புரத்தைச் சேர்ந்த மண்டைச்சாமி மகன் வரதராஜா (33) ஆகியோர் நேற்று திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரையும் ஒரு வார காலம் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் திரிவேணி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in