Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

சுற்றுலா பயணிகளை வரவேற்க நீலகிரி பூங்காக்கள் தயார் :

உதகை

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயார் நிலையில் உள்ளன.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதிமுதல் கரோனா தொற்று பரவல்காரணமாக சுற்றுலா தலங்கள்அனைத்தும் மூடப்பட்டன. தமிழக அரசு புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இதில், உயிரியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்றுமுதல் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம், தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில்நடைபெற்றன. குறிப்பாக,உதகை அரசு தாவரவியல்பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், படகுஇல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.

சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினிபயன்படுத்துதல் போன்ற கரோனோ விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்கும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள்கொண்ட பெயர் பலகைகளைசுற்றுலா தலங்கள் உள்ள பகுதிகளில் வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x