போதை பொருட்கள் பறிமுதல் :

போதை பொருட்கள் பறிமுதல் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அன்னை தெரசா நகர் வழியாக சென்ற வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 622 கிலோ போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதை கடத்தி வந்த வெற்றிவேல், வாகன ஓட்டுநர் துரைசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெற்றிவேல் அளித்த வாக்குமூலம் அடிப்படை யில் கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் வீடு மற்றும் கடையில் இருந்து 54 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இஸ்மாயிலையும் கைது செய்த னர். இஸ்மாயில் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், ஏ.குமாரமங்கலத்தைச் சேர்ந்த முத்துக்கும ரனை கைது செய்தனர். அவரது வீடு மற்றும் கடையில் இருந்து 38 கிலோ போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வீரசோழபுரத்தைச் சேர்ந்த முருகன்என்பவர் வீட்டில் 5 கிலோவும், சேந்தநாட்டைச் சேர்ந்த மணிகண் டன் என்பவர் வீடு மற்றும் கடையில் 34 கிலோ போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான 719 கிலோ போதைப் பொருட்கள், இரு வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in