Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM

ஈரோடு நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் புதிய வீட்டு மனைகள் விற்பனை தொடக்கம் :

ஈரோடு நசியனூரை அடுத்த புதுப்பாளையத்தில் நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் வீட்டு மனைகள் விற்பனை தொடக்க விழா நடந்தது.

ஈரோடு மாவட்டம் நசியனூர் காஞ்சிகோவில் செல்லும் சாலையில், தேசிய நெடுஞ்சாலை அருகில் புதுப்பாளையம் பகுதியில் சிவசக்தி அவென்யூ என்ற பெயரில் நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் புதிய வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டுமனைகளின் விற்பனையை நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் பத்மபிரியா, ஓம் பிரகாஷ், கோவிந்தராஜ், பாலமுரளி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வீட்டுமனைகள் விற்பனை குறித்து, நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூறியதாவது:

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மனைகள் டி.டி.சி.பி. அப்ரூவல் பெற்றது. மனைகளுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. வாஸ்து முறைப்படி வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்நிலை குடிநீர் தொட்டி, மின்சார வசதி, தார்சாலை, வடிகால் வசதி, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில், 750 சதுர அடி முதல் 4 ஆயிரம் சதுர அடி வரை மொத்தம் 93 மனைகள் உள்ளன.

விற்பனை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 35 மனைகளை வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இம்மாதம் 31-ம் தேதி வரை மனைகளை வாங்கும் அனைவருக்கும் பத்திரப்பதிவு இலவசமாக செய்து தரப்படும், என்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x