

சேலம் மாவட்டத்தில் நேற்று 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 10 பேர், வட்டார அளவில் வீரபாண்டியில் 13, மேச்சேரியில் 7, கொளத்தூரில் 6, சங்ககிரி, ஓமலூர், நங்கவள்ளி, மகுடஞ்சாவடியில் தலா 5, கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடியில் தலா 4, தலைவாசலில் 2, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், காடையாம்பட்டி, தாரமங் கலத்தில் தலா 1, நகராட்சி பகுதிகளில் ஆத்தூர், மேட்டூரில் தலா 1 மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 82 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.