Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM

மகளுடன் கிணற்றில் குதித்த தாய் - 4 மாத குழந்தை உயிரிழப்பு :

தென்காசி

தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் அருகே உள்ள மருக்காலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய பாண்டியன் (33). இவர், கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தங்கசெல்வி (30). இவர்களுக்கு கார்த்திக் (5) என்ற மகனும், கனுஷ்கா என்ற 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று பெரியபாண்டியனின் மனைவி தங்கச்செல்வி, மகள் கனுஷ்கா ஆகியோரை காணவில்லை. இதனால், அவர்களை அக்கம்பக்கத்தில் உறவினர்கள் தேடினர்.

அப்போது, மருக்காலங்குளம் ஊருக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தங்கச்செல்வி, தனது மகள் கனுஷ்காவுடன் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலைபோலீஸார் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிணற்றில் தத்தளித்த தங்கச்செல்வியை தீயணைப்புப் படையினர் உயிருடன் மீட்டனர். நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாத குழந்தை கனுஷ்கா உடல் மீட்கப்பட்டது. ஊத்துமலை போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x