கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கான நேரம் குறைப்பு :

கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கான நேரம் குறைப்பு :
Updated on
1 min read

கோவை, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இன்றும் (ஆக.21), நாளையும் அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், திருப்பூர் ரயில் நிலையத்தில், இன்று மற்றும் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் முன்பதிவு மையம் செயல்படும். ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய விரும்புவோர், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக கவுன்ட்டருக்கு வந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in