

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டகாங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் டதிபள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரத் தலைவர் அலெக்ஸ், நிர்வாகிகள் வைகுண்டதாஸ், ராஜா, விஜயகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.