Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM

இளையரசனேந்தல் ஒன்றியம் அமைக்க மனு :

கோவில்பட்டி: தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யிடம் அளித்தமனு விவரம்: இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 கிராமங்கள் கோவில்பட்டி வட்டத்தில் 2008-ம் ஆண்டு சேர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளும் படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன. ஆனால், 13 ஆண்டு காலமாக ஊராட்சி ஒன்றியம் மட்டும் குருவிகுளத்தில் தொடர்வதால் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகளை உடனே கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.அல்லது இளையரசனேந்தலை தலைமை இடமாகக் கொண்டு தனிஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x