Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM

எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா :

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்தம் நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். அருகில், மாவட்ட துணை செயலாளர் செல்வன், மாவட்ட அவை தலைவர் நாராயணன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயசுதா அசோக், கலியபெருமாள் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் போளூர் வசந்தம் நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

அலுவலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ண மூர்த்தி திறந்து வைத்தார். மேலும் அவர், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் செல்வன், மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயசுதா அசோக், கலியபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x