தாராபுரத்தில் இளைஞர் கொலை :

தாராபுரத்தில் இளைஞர் கொலை :
Updated on
1 min read

தாராபுரம் திருமலைபாளையத்தில் காலிமனை பகுதியில், இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அலங்கியம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இளைஞரின் தலை, கழுத்து, முதுகு என உடம்பின் பல்வேறு இடங்களில் கத்தி, அரிவாளால் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீஸார்கூறும்போது, “கொல்லப்பட்டவர் விருதுநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (24). மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வந்தார். 2018-ம் ஆண்டு நடந்த இருகொலை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பது தெரியவந்தது. பழிக்குப் பழியாக இந்த கொலைச்சம்பவம் நடந்ததாஎன்பது குறித்து விசாரித்து வரு கிறோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in