Published : 20 Aug 2021 06:40 AM
Last Updated : 20 Aug 2021 06:40 AM

பூட்டியிருந்த வீட்டில் 30 பவுன் திருட்டு :

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பருத்திக்கண்மாயைச் சேர்ந்தவர் செபஸ்தியான் (61). இவரது மனைவி ஜெயராணி. மகன் ஜான் பீட்டர் தனியார் வங்கி மேலாளராகவும், மருமகள் ஜான்சி கொல்லங்குடி உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக வும் உள்ளனர். நேற்று காலை ஜான்பீட்டர், ஜான்சி, ஜெயராணி வேலைக்குச் சென்றனர். செபஸ் தியான் பகல் 12.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டுச் சென்றார்.

பிற்பகல் 3 மணிக்கு ஜெய ராணி வீட்டுக்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது. பீரோ வில் இருந்த 30 பவுன் நகை கள், ரூ.9.75 லட்சத்தை காண வில்லை. இதுகுறித்து காளை யார்கோவில் போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x