என்சிசி 10-வது பட்டாலியனில் குரூப் கமாண்டர் ஆய்வு :

என்சிசி 10-வது பட்டாலியனில் குரூப் கமாண்டர் ஆய்வு :
Updated on
1 min read

வேலூரில் 10-வது பட்டாலியன் என்சிசி அலுவலகத்தில் குரூப் கமாண்டர் கர்னல் ஜெர்னைல் சிங் ஆய்வு செய்தார்.

வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள 10-வது பட்டாலியன் என்சிசி அலுவலகத்தில் சென்னை ‘ஏ’ பிரிவு குரூப் கமாண்டர் கர்னல் ஜெர்னைல் சிங், நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஜி.ஆர்.சர்மா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் சர்மா, நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே.சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு என்சிசி மாணவர்கள் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையை அளித்தனர்.

இந்த ஆய்வின்போது பட்டாலியன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தவர், தமிழ்நாடு என்சிசி இயக்குனரகத்துக்கு பெருமை சேர்த்த 10-வது பட்டாலியன் என்சிசி முதன்மை அலுவலர் ராஜா (காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி), என்சிசி அலுவலர் லெப்டினன்ட் ரவி சங்கர் பாபு (விஐடி), என்சிசி அலுவலர் லெப்டினன்ட் ஞானலின் ஷைனி (ஊரீசு கல்லூரி), என்சிசி மாணவி சத்திய பிரியா, அவில்தார் சுப்பிரமணி, அமைச்சுப் பணியாளர் மோகன், கீர்த்திவாசன் ஆகியோரை குரூப் கமாண்டர் கர்னல் ஜெர்னைல் சிங் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in