Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு :

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பு மாதத்துக்கான குறைதீர் கூட்டம், வரும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. ஆகவே விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் இருந்து, காணொலிக் காட்சி வாயிலாக தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x