நெய்வேலியில் பெண் தற்கொலை :

நெய்வேலியில் பெண் தற்கொலை :
Updated on
1 min read

நெய்வேலி அருகே உள்ள ஏ.குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்( 40). இவரது மனைவி சங்கீதா (30). இவர் உறவினர்களிடம் பணம் வாங்கி அதனை தெரிந்தவர்களிடம் கொடுத்துள்ளார். கொடுத்த பணம் திரும்பி வராததால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் சந்திரசேகர் மந்தாரக்குப்பம் போலீஸில் புகார் செய்தார். இந்நிலையில் முத்தாண்டிக்குப்பம் அருகே கொள்ளுகாரன் குட்டை பகுதி முந்திரி தோப்பில் சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் தவச்செல்வன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in