திட்டக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தீ விபத்து :

திட்டக்குடி அருகே செங்கல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஏற்பட்ட தீ விபத்தில்  எரிந்து கிடக்கும் புத்தகங்கள், பள்ளி ஆவணங்கள்.
திட்டக்குடி அருகே செங்கல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து கிடக்கும் புத்தகங்கள், பள்ளி ஆவணங்கள்.
Updated on
1 min read

திட்டக்குடி அடுத்த உள்ள செங்கமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளியை பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றனர். அப்போது பள்ளியின் பழைய கட்டிடத்தில் உள்ள வகுப்பறையில் மர்மமான முறையில் தீப்பற்றியது. இதில் அறையிலிருந்த மூன்று பீரோக்களும் அதிலிருந்த பள்ளிஆவணங்கள், பாடப்புத்தகங்கள், சீருடைகள், ஆசிரியர்களின் நான்கு லேப்டாப்கள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் (ஆர்.ஓ)என ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.தகவலறிந்த பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர். ஆவினங்குடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த தீவிபத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in