Published : 19 Aug 2021 03:13 AM
Last Updated : 19 Aug 2021 03:13 AM

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசுக்கு வலியுறுத்தல் :

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ் வழியில் அர்ச்சனை செய்யலாம் என தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை முழுமனதுடன் வரவேற்கிறோம். இவற்றை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை அடையாளத்துக்குச் செய்துவிட்டு விடக்கூடாது. உச்ச நீதிமன்றம் 16.12.2015-ல் அளித்த தீர்ப்பில் அர்ச்சகராக சாதியோ, மொழியோ நிபந்தனை இல்லை. அர்ச்சனை செய்வதற்கு இந்த மொழிதான் என்ற நிபந்தனை கிடையாது எனக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே 2006-ம் ஆண்டில் பிறப்பித்த ஆணை செல்லும். இதை முழுமையாகச் செயல்படுத்தி, அனைத்து கோயில் களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x