சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு : உரிய மரியாதை வழங்கப்படவில்லை : தமிழக அரசு மீது இந்து மக்கள் கட்சி அதிருப்தி :

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு  : உரிய மரியாதை வழங்கப்படவில்லை : தமிழக அரசு மீது இந்து மக்கள் கட்சி அதிருப்தி :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், "சுதந்திர தினத்தையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான உரிய மரியாதையை தமிழக அரசு வழங்கவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரிசைப்படுத்தும்போது, வீரன் அழகுமுத்துகோன் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சுதந்திர போராட்ட வீரர் லட்சுமிகாந்தன் பாரதி மன வேதனையடையும் வகையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் நடந்துகொண்டுள்ளார். எனவே, தென்காசி மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கடைபிடித்து, கருப்புக்கொடி ஏற்றிய பெரியாரை சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in