Published : 18 Aug 2021 03:13 AM
Last Updated : 18 Aug 2021 03:13 AM

‘இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தோர் நாளை பங்கேற்க அழைப்பு’ :

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் நேற்று கூறும்போது, "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்டப் பிரிவு 12(1) (சி)-ன் கீழ், சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசால் ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, 2013-14-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நடப்பு கல்வி ஆண்டுக்கு, கடந்த ஜூலை 5-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில், பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள 146 பள்ளிகளில், நாளை (ஆக.19) காலை 9 மணிக்கு குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர், தாங்கள் விண்ணப்பித்த பள்ளியில் நடைபெறும் குலுக்கலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x