Published : 18 Aug 2021 03:15 AM
Last Updated : 18 Aug 2021 03:15 AM

நெல் கொள்முதல் நிலையங்களில் தி.மலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

தூசி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பா.முருகேஷ்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 16-ம் தேதி முதல் செயல்படுகிறது. இந்நிலையில், செய்யாறு அடுத்த வெம்பாக்கம், தூசி, பெருங்கட்டூர் கிராமங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, "நெல் மூட்டைகளை விற்பனை செய்ய https://tvmdpc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இணையதள வழியில் முன்பதிவு செய்து வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வர வேண்டும்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x