நீலகிரி மாவட்டத்தில் 11 இடங்களில் - அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

நீலகிரி மாவட்டத்தில் 11 இடங்களில் -  அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், கோரிக்கை அட்டைகளை அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர்.

உணவு இடைவெளியின்போது, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஆஸ்ரா விளக்கினார். வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் தோட்டக்கலைத் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in