Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

நலவாரியத்தில் பதிவு செய்ய உலமாக்களுக்கு அழைப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தி லுள்ள உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரி யத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:

18 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள இஸ்லாமியர்கள் பள்ளி வாசல்கள், தர்காக்கள், அடக் கஸ்தலங்கள், தைகாக்கள், ஆஷீர்கானாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணி புரியும் பணியாளர்கள் அனைவரும் தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கண் கண்ணாடி செலவு தொகையை ஈடுசெய்தல், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை போன்ற நல உதவிகள் வழங்கப்படுகிறது. இதற் கான விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 11-ல் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x