சாலை பணியை முடிக்கக் கோரி மா. கம்யூ கையெழுத்து இயக்கம் :

சாலை பணியை முடிக்கக் கோரி மா. கம்யூ கையெழுத்து இயக்கம் :
Updated on
1 min read

விக்கரவாண்டியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலை (விகேடி சாலை) கடந்த5 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச் சாலையாக அமைப்பதற்காக நகாய் பணியை தொடக்கியது. சாலை பணி மெதுவாக நடைபெறு கிறது. இதனால் இருக்கும் சாலை குண்டும், குழியுமாக மாறியது. பல விபத்துக்களும் நடந்து வருகின்றன. இந்த சாலைப்பணிகளை துரிதப்படுத்திடக்கோரி நேற்று நெய்வேலி ஆர்கேட் பகுதியில் நெய்வேலி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தை தொடக்கினர். மாவட்டக் குழு உறுப்பினர் மீனாட்சிநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலமுருகன், நகர குழுஉறுப்பினர்கள் குப்புசாமி, மணிமாறன், முருகன், மணி, சிஐடியூ முன்னாள் தலைவர் முத்துவேல் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in