கரோனா பாதிப்பு நீங்க சிறப்பு பூஜை :

கரோனா பாதிப்பு  நீங்க சிறப்பு பூஜை :
Updated on
1 min read

கரோனா தொற்று நீங்கி பொதுமக்கள் நலமுடன் வாழவேண்டி தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு 108, 1008தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். பூஜையை மாவட்ட இளைஞர் அணி செல்லத்துரை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கிராம நல வழிபாட்டை வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். பிரச்சார குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சக்தி கொடியை பத்மா ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in