Published : 17 Aug 2021 03:17 AM
Last Updated : 17 Aug 2021 03:17 AM

வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு :

வேலூர் அண்ணா சாலை அருகே தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது.

இந்த நூலகத்தில் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட நூலக அலுவலர் பழனி, மாவட்ட நூலக கண்காணிப்பாளர் சிவகுமார், மைய நூலகர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நூலகத்தில் உள்ள நூல்கள் குறித்தும் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன் மைய நூலகத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் திட்டம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். மைய நூலகத்தின் ஒரு பிரிவாக செயல்படும் மகளிர் கிளை நூலகத்துக்கு கஸ்பா செயின்ட் மேரிஸ் பள்ளி அருகில் உள்ள காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான மதிப்பீடு பணிக்கான கருத்துரு சமர்ப்பிக்க நூலக அதிகாரிகளுக்கு ஆட்சி யர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x