திருப்பூர் மாநகர் பாளையக்காடு பகுதியில் - குடிநீர் கோரி சாலை மறியல் :

திருப்பூர் மாநகர் பாளையக்காடு பகுதியில் -  குடிநீர் கோரி சாலை மறியல் :
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட பாளையக்காடு பகுதியில், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தி பாஜக மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் மிகவும் அவதிப்படுகிறோம். 10 நாட்களுக்கு ஒருமுறைவிநியோகிக்கப்படும் குடிநீரும், மிகக் குறைந்த அளவே வருகிறது.ஒரு வீட்டுக்கு ஆயிரம் லிட்டருக்குகுறைவாகவே குடிநீர் கிடைக்கிறது. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர். பாஜக மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். நல்லூர் மண்டல பொதுச் செயலாளர் குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். சீராக குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in