தமுஎகச சார்பில் : சுதந்திர தின விழா :

தமுஎகச சார்பில் : சுதந்திர தின விழா :
Updated on
1 min read

75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் அதிகாலை 12.01 மணிக்கு தேசியக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடினர்.

தமுஎகச செங்கை கிளையின்சார்பாக திருமணி நேரு தெருவில் கிளையின் தலைவர் சத்தியன் தலைமை தாங்க, மாவட்ட இணைச் செயலாளர் வழக்கறிஞர் மு.முனிச்செல்வம் தேசிய கொடியைக் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். கே.கே.நகர், பாரதியார் தெருவில் மூத்த வழக்கறிஞர் ஜெயபிரபுராஜன் தலைமை தாங்க, கட்டுமான தொழிலாளி வெங்கடேசன் தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல், மதுராந்தகம், சூனாம்பேடு உள்ளிட்ட 20 இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in