அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு :

அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

ஈரோடிலிருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்றுநேற்று அதிகாலை சென்னைநோக்கி சென்று கொண்டிருந் தது. ஈரோட்டைச் சேர்ந்த ஓட்டு நர் எம்ஜிஆர் (45) லாரியை ஓட்டி சென்றார். திண்டிவனம் அருகே கர்ணாவூர் கிராமம் அருகே லாரியின் இடது புற பின்பக்க டயர் பஞ்சரானது. இதனால் சென்டர் மீடியன் ஓரமாகலாரியை நிறுத்தி ஓட்டுநரும், கிளீனர் சண்முகமும்(40) டயரைகழட்டி மாட்டிக்கொண்டிருந் தனர். அப்போது மதுரையி லிருந்து சென்னைக்கு சென்ற அரசு விரைவுப்பேருந்து மோதியதில் எம்ஜிஆர், சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டிவனம் போலீஸார் உடல்களை பிரேத பரிசோத னைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in