

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆட்சியர் ச.விசாகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து சிறப்பாகப் பணிபுரிந்த அரசு ஊழியர்கள், போலீஸார், தீயணைப்புத் துறையினருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், டி.ஐ.ஜி., விஜயகுமாரி, காவல் கண்காணிப்பாளர் னிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி
ராமநாதபுரம்
மேலும் தேசிய, தென்மண்டல அளவிலான விளையாட்டுகளில் பதக்கம் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்மிளா (குண்டு எறிதல்), சரண் (தடகளம் 800 மீ.), மதுமிதா (வட்டு எறிதல்), ஷாலினி, ரவிசனா (கால்பந்து), ஐஸ்வர்யா (வட்டு எறிதல்) ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரத்தில் தியாகிகள் எம்.பாண்டியராஜ், மு.சேது, என்.கோமதி, எஸ்.தேனம்மாள் ஆகிய 4 பேரின் வீடுகளுக்குச் சென்று கோட்டாட்சியர், வட்டாட்சியர் கவுரவித்தனர்.
சிவகங்கை
சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளின் 465 ஊழியர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலை, குயிலி நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
சிவகங்கை காசி விசுவநாதர் கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஆட்சியர் வேட்டி, சேலை வழங்கி மதிய உணவு அளித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலன், அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.