Published : 15 Aug 2021 03:25 AM
Last Updated : 15 Aug 2021 03:25 AM

தமிழக அரசு பொறுப்பேற்று 100-வது நாளையொட்டி விழுப்புரத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் :

விழுப்புரம் அருகேகொத்தாம்பாக்கம் கிராமத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

தமிழக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 100-வது நாளையொட்டி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கொத்தாம்பாக்கம் கிராமத்தில் மா, அரச மரம், தேக்கு மற்றும் கொய்யா போன்ற 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் மோகன் தொடக்கி வைத்தார். திட்ட இயக்குநர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x