Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM

போக்ஸோ சட்டத்தில் இருவர் கைது :

திருப்பூர் மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப் பட்டனர்.

உடுமலை அருகே கொழுமம்மேட்டுத்தெருவில் வசிப்பவர் ஐயப்பன் (54). பூசாரியான இவர், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் உடுமலை மகளிர் போலீஸார் வழக்குபதிந்து, ஐயப்பனை கைது செய்தனர்

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் திருவூரை சேர்ந்தவர் பிரசாந்த் (25). பனியன் நிறுவனத் தொழிலாளி. திருமணமாகி குடும்பத்துடன் திருப்பூர்மாவட்டம் மங்கலம் அருகே வசித்து வந்தார்.

இந்லையில், பிளஸ் 2 மாணவி ஒருவருக்குபாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து,பிரசாந்தை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x