Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM

தபால் நிலையங்களில் அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு :

தபால் நிலையங்களில் தனிநபர் அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரடங்கிலும், பொதுமக்களுக்கு கடிதங்கள், பார்சல்கள் பட்டுவாடா மட்டுமின்றி, சேமிப்பு திட்டங்களிலும் அனைத்து சேவைகளையும் தபால்துறை தடையின்றி வழங்கி வருகிறது. இத்துடன் அஞ்சலக அடையாள அட்டை விநியோகமும் தபால் துறை சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.20-ம், அடையாள அட்டை கட்டணமாக ரூ.250-ம், பதிவு தபால் மூலம் பெற ரூ.22 சேர்த்து செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால், அஞ்சலக அடையாள அட்டை வீடு தேடி வரும்.

இதனை ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய முக்கியச் சான்றாக பயன்படுத்தலாம். கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இச்சேவை கிடைக்கும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x