Published : 14 Aug 2021 03:22 AM
Last Updated : 14 Aug 2021 03:22 AM

14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு - புரம் பொற்கோயிலில் : சூக்த அஷ்டலட்சுமி ஹோமம் :

வேலூர்

புரம் பொற்கோயிலின் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு  சூக்த அஷ்டலட்சுமி ஹோமம் தொடர்ந்து 11 நாட்கள் நடை பெறவுள்ளன.

இதுகுறித்து வேலூர் புரம் பொற்கோயில் இயக்குநர் எம்.சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் அடுத்த புரம்  லட்சுமி நாராயணி பொற்கோயில் 14-ம் ஆண்டு விழா வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு  சூக்த அஷ்டலட்சுமி ஹோமம் இன்று (14-ம் தேதி) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினசரி காலை 8-9 மணி வரை  மகாலட்சுமி மூலமந்திர ஹோமம், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை உபச்சாரம், மஹா ஆரத்தி ஆகியவை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.

வரும் 24-ம் தேதி இரவு 8 மணியளவில்  சூக்த அஷ்டலட்சுமி ஹோமம் பூர்ணாஹூதியும் தொடர்ந்து  சக்தி அம்மா அவர்களின் கரங்களால் மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது’’ என தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x