தாராபுரம், உடுமலை, உதகை பகுதிகளில் - போக்ஸோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது :

தாராபுரம், உடுமலை, உதகை பகுதிகளில் -  போக்ஸோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தில்லைகவுண்டன்புதூரை சேர்ந்த 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமார் 25) என்பவரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் தாராபுரம்அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல, உடுமலை காவல் நிலையம் எஸ்.கே.பாளையம் பகுதியில் 17 வயது சிறுமி காணாமல் போனதாக, பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த ஈஸ்வர் (19) என்பவர்,திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றுபாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமி காணாமல் போன வழக்கை போக்ஸோ வழக்காக மாற்றி, ஈஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உதகை

சிறுமியின் பெற்றோர் இறந்ததால், சித்தப்பாவின் பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்துள்ளார். அத்தை வீட்டுக்கு சென்று சில காலம் சிறுமி தங்கியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியை அவிநாசிக்கு அழைத்துச் சென்று கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு, அதே பகுதியில் 2 மாதம் வசித்து வந்துள்ளார்.

தற்போது, அந்த சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சைல்டு லைன் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபுவுக்கு கிடைத்த தகவலின்பேரில் "கப்பச்சியில் உள்ள தொடர்புடைய பகுதிக்கு சமூக பணியாளர் ரஜ்யா மற்றும் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக காந்தல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தது, பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட போக்ஸோ சட்டத்தின் பிரிவுகளில் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in