நகராட்சி, பேரூராட்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் :

நகராட்சி, பேரூராட்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் :
Updated on
1 min read

நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி போராட்டத்தை ஆதரித்து பேசினார். ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி மக்கள்தொகை பெருக்கம் மற்றும் விரிவாக்கத்துக்கு ஏற்ப கூடுதல் ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அரசு அறிவித்த கரோனா ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.மாலதி, செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in