சிறந்த நகராட்சியாக உதகை தேர்வு :

சிறந்த நகராட்சியாக உதகை தேர்வு :
Updated on
1 min read

ஆங்கிலேயர் காலத்தில் உதகை நகராட்சி 1866-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் மதராஸை அடுத்துஉருவாக்கப்பட்ட பெருமை உதகை நகராட்சிக்கு உள்ளது. உதகை நகராட்சி தொடங்கப்பட்டு, 150-வது ஆண்டை கடந்துள்ள நிலையில், தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக உதகை நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உதகை நகராட்சி ஆணையர் சரஸ்வதி கூறும்போது, ‘‘கரோனாகாலத்தின் சிறந்த செயல்பாடு, தடையற்ற தண்ணீர் விநியோகம்,தூய்மை மற்றும் மக்களின் குறைகள் நிவர்த்தி செய்ததற்காக தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக உதகை தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது, விருது மற்றும் ரூ.15லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in