Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

மத்திய அரசுக்கு காங்.கண்டனம் :

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பார்வையாளர்கள் பேபி மற்றும் காயத்திரிதேவி மற்றும் கோவை முன்னாள் மேயர் வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர். மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ராஜூவ் காந்தி கேல் ரத்னாவிருது, இனிவரும் காலங்களில் ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என்ற பெயரில் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க பனியன் உரிமையாளர் சங்கத்தை கேட்டுக்கொள்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x