Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

காஞ்சிபுரம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது :

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக காட்டன் சூதாட்டம் நடைபெற்று வந்தது. இதைத் தடுக்க போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனைநடத்தி வந்தனர். இந்தச் சூழ்நிலையில் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சோதனை நடத்திய போலீஸார் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்த அசோகன்(56) என்பவரைக் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கூறும்போது, “அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் பெட்டிங் லாட்டரி, சூதாட்டம் மற்றும் கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x