நூறு நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார் :

நூறு நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார் :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் மாணிக்காபுரம்ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்காபுரம், ராசாக்கவுண்டம்பாளையம், அம்மாபாளையம் உட்பட பல்வேறுகுக்கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில கிராமங்களில் மட்டும் குறிப்பிட்ட சிலருக்கு 100 நாள் வேலை வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பஞ்சலிங்கம் தலைமையில், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்டபயனாளிகள், பாரபட்சமின்றி 100நாட்களும் வேலைவாய்ப்பு வழங்கவேண்டுமென வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷிடம் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in