

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் குழு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயத்தை கார்பரேட்டு களிடம் அடகு வைக்கக்கூடாது. தொழிலாளர்கள் சட்ட தொகுப்பைகைவிட வேண்டும். விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச விலைஉத்திரவாதத்தை உறுதிபடுத்தவேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களையும், ஊதியத்தையும் உயர்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஏ.வி. சரவணன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சிஐடியூ மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலும் உட்பட மாவட்டத்தில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கள்ளக்குறிச்சி
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதகடிப்பட்டு பேருந்து நிலையம், பாகூர் தேரடி வீதி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடத்தினர்.