Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

நெல்லிக்குப்பத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும் : விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்

நெல்லிக்குப்பத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.

கடலூர்

நெல்லிக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.

நெல்லிக்குப்பம் நகர செயலாளர் புலிக்கொடியன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பா ளர் சபா, நகரத் துணைச் செயலாளர் கள் அறிவழகன், சமத்துவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மாநில நிர்வாகிகள் திருமலை தர், மாவட்ட நிர்வாகிகள் பர்குணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் வரும் 17-ம்தேதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவள் எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவது, அன்னதானம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. நெல்லிக்குப்பம் நகரம் முழுக்க அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை உடனடியாக செய்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x