Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

எஸ்டிபிஐ ஆலோசனை கூட்டம் :

தூத்துக்குடி

தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தொகுதி தலைவா் ஏ.காதர் உசேன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளா் எம்.ஷேக் முகைதீன் அலி வரவேற்றார்.

தோ்தல் பணிக்குழு, பூத் கமிட்டி அமைப்பது, விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சரி செய்வது, உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடம் கூறி ஆதரவு திரட்டுவது, தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில்15 இடங்களில் போட்டியிடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளா்களாக தூத்துக்குடி மாவட்ட தலைவா் எச்.சம்சுதீன், மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.உஸ்மான், மாவட்டச் செய லாளா் மைதீன்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் காதர் முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி துணைத் தலைவர் என்.மாமுநைனா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x