திருக்கோவிலூர் அருகே மூதாட்டியை எரித்துக் கொன்ற 2 பேர் கைது :

திருக்கோவிலூர் அருகே மூதாட்டியை எரித்துக் கொன்ற 2 பேர் கைது :
Updated on
1 min read

திருக்கோவிலூரை அடுத்த அத்திப்பாக்கம் காட்டுப் பகுதியில் ஜூலை 14-ம் தேதி எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. மணலூர்பேட்டை போலீஸார் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இறந்தது அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வையாபுரி மனைவி பார்வதி(65) என்பதும், கணவர் இறந்த நிலையில் அவர் தனிமையில் வசித்து வந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கொலையில், நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அருள் சகாயம் (19), ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (20) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தனிமையில் இருந்த பார்வதிக்கு இருவரும் சிறுசிறு உதவிகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 13-ம் தேதி பார்வதியை சடகட்டிகோயிலுக்கு விஜய், பைக்கில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அருள்சகாயத்தையும் கண்டு, அவரை யும் பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பைக்கை நிறுத்தி பார்வதியை புடவையால் இறுக்கி, மூச்சுத் திணற செய்து உயிரிழக்க செய்தனர். அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளனர். பின்னர் பைக்கிலிருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பார்வதி உடல் மீது ஊற்றி எரித்துவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 பவுன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in