Published : 07 Aug 2021 03:18 AM
Last Updated : 07 Aug 2021 03:18 AM

7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடமாற்றம் :

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பிறப்பித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) - குன்றத்தார் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஆர்.வெங்கடேசன் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகவும், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மு.பவானி - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) ஏ.எஸ்.தங்கராஜும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வி.பாலாஜி - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.நிர்மலா - வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகவும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆர்.சம்பத் - வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x