சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைப்பு :

சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் புதிதாக கதவு பொருத்தப்பட்டது.
சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் புதிதாக கதவு பொருத்தப்பட்டது.
Updated on
1 min read

‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியால் சிவகங்கை பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு புதிதாக கதவு பொருத்தப்பட்டது.

பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் தனிமையில் பாலூட் டும் வகையில் 2015-ல் மாநக ராட்சி, நகராட்சி பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்திலும் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் கண்காணிப்பு இன்றி அந்த அறை ஆண்கள் ஓய்விடமாக மாறியது. மேலும் அறைக்கு கதவும் இல்லாமல் இருந்தது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் இந்த அறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஆக.1 முதல் ஆக.7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப் பிடிக்கும் நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் அவலம் குறித்து ஆக. 4-ம் தேதி ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு நகராட்சி அதிகாரிகள் புதிதாக கதவு பொருத்தினர். மேலும் ஆண்கள் இந்த அறையில் தங்கக் கூடாது என எச்சரித்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in