Published : 07 Aug 2021 03:18 AM
Last Updated : 07 Aug 2021 03:18 AM

துபாயில் இறந்த மகனின் உடலை கொண்டுவர வேண்டும் : ஆட்சியரிடம் தந்தை மனு

ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் (26). பட்டதாரியான இவர், 21.7.2019-ல் துபாய்க்குச் சென்று சூப்பர் மார்க் கெட்டில் பணிபுரிந்தார். விசா முடிய உள்ளதால் 2 நாட்களில் ஊர் திரும்ப உள்ளதாக போனில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழ்ச் செல்வன் இறந்து விட்டதாக, அங்கு பணியாற்றும் உறவினர் மூலம் சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உறவி னர்களுடன் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் வந்த சேகர், தனது மகன் சாவில் மர்மம் உள்ள தாகக் கூறி அவரது உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x